மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொறியியல்  சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு! 

0
96
#image_title

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொறியியல்  சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு! 

மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 460- க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் காலியாக உள்ள 1.5 லட்சம் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வின் மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான  கலந்தாய்வு, தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் ஜூலை 2-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஜூலை 2-ஆம் தேதி முதல் 5-ஆம்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. அடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான இணையதள விண்ணப்ப பதிவு மே மாதம் 5-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.  இதில் தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய ரேண்டம் எண்ணை www.tneaonline.org இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே மாதிரி கட்ஆப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து ரேண்டம் எண் மூலமாக முடிவு செய்யப்படும்.

பின்னர் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி வருகின்ற 20-ஆம் தேதி வரை நடைபெறும். அடுத்து தரவரிசை பட்டியல் வருகின்ற 26 -ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் இது பற்றிய கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.