கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்! அதுக்காகதான் இப்படி செய்தேன் என்று வாக்குமூலம்..!!

0
196

கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்! அதுக்காகதான் இப்படி செய்தேன் என்று வாக்குமூலம்..!!

கள்ளக்காதலனை பிரிய மனம் இல்லாமல் அவருக்கு தனது மகளையே திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை பல்லாவரம் அருகேயுள்ள பொழிச்சலூர் பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர், தனது அத்தை மகள் மஞ்சுளா என்பவரை 20 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 19 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

சென்னை மற்றும் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் கட்டட வேலையை கண்ணன் செய்து வந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு கண்ணன் அவரது சொந்த ஊரான வந்தவாசி அருகேயுள்ள தென்னகரத்தில் கட்டட வேலை செய்தபோது அங்கிருந்த பதினாறு வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கூட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து பெண்ணை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் பொழிச்சலூரை சேர்ந்த கண்ணன்தான் சிறுமியை அழைத்துச் சென்றார் என்று தெரியவந்தது.

இந்நிலையில், கண்ணனை தேடி போலீசார் விரைந்தபோது கண்ணன் சென்னையில் இருந்து தப்பியுள்ளார். நீண்ட தேடுதலுக்கு பிறகு பெங்களூரில் இருந்த கண்ணனை கைது செய்து அவருடன் இருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். பெண்ணின் எதிர்காலம் பாழாகும் என்பதால் சங்கர் நகர் போலீசார் கண்ணனிடம் கண்டிப்புடன் எழுதி வாங்கிக்கொண்டு அறிவுரையுடன் கூறி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, 2018 ஆம் ஆண்டு ஊரப்பாக்கத்தில் கட்டிட வேலைக்கு சென்ற கண்ணன், அங்கு வேலைபார்த்த யுவராணி என்பவருடன் அடிக்கடி பேசி தனது கள்ளக் காதலை வளர்த்துள்ளார். இந்த சம்பவம் ஒரு வருடம் கழித்தே கண்ணனின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதன் பிறகு கண்ணனின் முதல் மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். பின்னர் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி முதல் மனைவியுடன் கண்ணனை அனுப்பி வைத்தனர்.

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது கள்ளக்காதல் கண்ணன் தொடர்ந்தார். இருவருக்குமான உறவை முதல் மனைவி பிரித்துவிடுவாரோ என்று எண்ணி தனது 19 வயது மகளை கண்ணனுக்கு அவரது கள்ளக்காதலி திருமணம் செய்து வைத்துள்ளார். இதனையறிந்த கண்ணனின் முதல் மனைவி விரக்தியுடன் காவல்துறையில் புகார் கூறினார். இதனையடுத்து தனது முதல் மனைவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசுவதும், கொலை மிரட்டல் விடுத்த காரணத்தாலும் கர்ணன் கைது செய்யப்பட்டு தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தவறான உறவிற்கு பெற்ற மகளையே கள்ளகாதலனுக்கு திருமணம் செய்தி வைத்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Jayachandiran