அரசு விழாவில் துணை முதல்வரின் புகைப்படம் புறக்கணிப்பு…! ஆதரவாளர்கள் கொந்தளிப்பு…!

0
62

திருச்சி அருகே இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் நேற்றைய தினம் நடந்த ஒரு அரசு விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் அவர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருச்சி உள்பட 6 மாவட்டங்களை சார்ந்த 525 தனியார் பள்ளிகளுக்கு, இரண்டு வருடங்களுக்கான அங்கீகார சான்றிதழ்களை வழங்கியுள்ளார், இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் படம் இடம்பெற்றிருந்தது.

ஆனால், தமிழக துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களின் படம் இடம் பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது, விழா மேடையில் மட்டுமின்றி கல்லூரி நுழைவாயிலில் கூட ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த சுவரொட்டிகளிலும் கூட முதல்வர் படம் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் புகைப்படம் அரசு விழாவில் புறக்கணிக்கப்பட்டு இருப்பது, அவரின் ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.