ஒருவரை நம்பினால் இதுதான் கதி! நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

0
65
The incident of abducting a schoolgirl after using Facebook in Thanjavur district! A lot of excitement in the area!
The incident of abducting a schoolgirl after using Facebook in Thanjavur district! A lot of excitement in the area!

ஒருவரை நம்பினால் இதுதான் கதி! நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). மணிகண்டன்  தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கும் நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த  பழக்கத்தினால் சிறுமையிடம் திருமண ஆசை வார்த்தையை கூறி மணிகண்டன் அவரை கடத்திச் சென்று கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் அந்த சிறுமியின் பெற்றோர்கள் மகளைக் காணாததால் அதிர்ச்சி அடைந்தார்கள்.  இது குறித்து நாமகிரிப்பேட்டை புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலகண்ணன் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையின் முடிவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் அந்த சிறுமியை மீட்டு எடுத்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

மேலும் ஒரு சிறுமையை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற குற்றத்திற்காக மணிகண்டனை போக்கு சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மேலும் கோட்டிங் தீர்ப்புப்படி பரமத்தி வேலூரில் உள்ள சிறையில் மணிகண்டன் அடைக்கப்பட்டார். 17 வயது சிறுமிக்கு திருமணமானதை குறித்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் அந்த சிறுமிக்கு போலீசார் அறிவுரை கூறி அந்த சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

author avatar
Parthipan K