இது தெரிந்தால் இனி காசு போட்டு பாதாம் பிஸ்தா நட்ஸ் வாங்க மாட்டீர்கள்!! வீட்டில் இருக்கும் இந்த 5 போதும்!!

0
139
#image_title

இது தெரிந்தால் இனி காசு போட்டு பாதாம் பிஸ்தா நட்ஸ் வாங்க மாட்டீர்கள்!! வீட்டில் இருக்கும் இந்த 5 போதும்!!

விதை உணவு பொருட்கள் அதாவது நட்ஸ் என்றால் நம் நினைவிற்கு வருவது பாதாம், பிஸ்தா ஆகிய விலை உயர்ந்த நட்ஸ் வகைகள் தான். இதை பணம் இருப்பவர்கள் வாங்கி உண்பார்கள். அவ்வாறு அதிக பணம் இல்லாதவர்களும் வாங்கி உண்ணும் வகையில் விலை மலிவான ஐந்து நட்ஸ் வகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 

* வேர்க்கடலை

 

வேர்க்கடலையில் பாதாம், முந்திரியில் இருக்கும் சத்துக்களை விட அதிக அளவு சத்துக்கள் உள்ளது. வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு, உடலுக்கு தேவையான புரதம், மெக்னீசியம், போலிக் ஆசிட், விட்டமின் ஏ, விட்டமின் பி3, நைட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த வேர்க்கடலை ஒரு கிலோவின் விலை 100 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கும்.

 

வேர்க்கடலையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

 

தினமும் ஒரு கையளவு வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். பித்தப்பை கற்களை கரைக்கும். இதய வால்வுகளை பாதுகாக்கும். இதயத்தை பாதுகாத்து இதய நோய் வராமல் தடுக்கும். இளமையை பராமரித்து சருமத்தை பாதுகாக்கும். நியாபகசக்தியை அதிகரிக்கும். மன அழுத்தம் குணமாகும். இதில் உள்ள நல்ல கொழுப்புகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இதில் போலிக் ஆசிட் அதிக அளவில் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். கர்பப்பை பலப்படும்.

 

2. கொண்டைக் கடலை

 

கொண்டைக் கடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளைக் கொண்டைக் கடலை. மற்றொன்று கருப்பு கொண்டைக் கடலை. இதில் கருப்பு கொண்டைக் கடலையில் தான் சத்துக்கள் அதிக அளவு உள்ளது. இந்த கருப்பு கொண்டைக் கடலையில் போலிக் அமிலம், மெக்னீசியம் ஆகியச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இந்த கருப்பு கொண்டைக் கடலை மாரடைப்பு காரணியான போமோசிஸ்டினை தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், ஆன்டி ஆக்சின் தன்மை கொண்ட சால்போனிக் போன்ற பைட்டோ வேதிப்பொருட்கள் அதிக அளவில் உள்ளது. வெள்ளை கொண்டைக் கடலையை விட கருப்பு கொண்டை கடலையில் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. குளுக்கோஸ் பயன்பாட்டை மேம்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தினமும் சாப்பிட்டு வரலாம். இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

 

3. சோயா பீன்ஸ்

 

அசைவு உணவுகளுக்கு நிகரான அதிக அளவு புரதச் சத்துக்கள் கொண்ட உணவுப் பொருள் என்ன என்றால் அது சோயா பீன்ஸ் தான். 5 லிட்டர் பசும்பாலில் உள்ள புரதம், 1 கிலோ மாமிசத்தில் உள்ள புரதம், 24 நாட்டுக் கோழி முட்டைகளுக்கு சமமான புரதம் ஆகியவை கொண்ட ஒரே சைவ தானியப் பொருள் இந்த சோயா பீன்ஸ் மட்டும் தான். உடல் எடையை குறைப்பதற்கு சோயா பீன்ஸ்க்கு முக்கிய பங்கு உள்ளது. சோயாவில் உள்ள நல்ல கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கின்றது. சோயா பீன்ஸ் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மற்ற தானியங்களில் இல்லாத அளவிற்கு 240 மிலி கிராம் கால்சியம், 690 மிலி கிராம் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. இதனால் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

4.உலர் திராட்சை

 

உலர் திராட்சையில் அத்தியாவசிய சத்துக்களான மெக்னிசியம், பாஸ்பரஸ், ஒஇரும்புச் சத்துக்கள் ஆகியவை அதிக அளவு உள்ளது. இரவு தூங்கும் முன்பு பத்து முதல் இருபது உலர் திராட்சைகளை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இந்த உலர் திராட்சைகளை நீருடன் சேர்த்து பருகி வந்தால் உடலில் பலவிதமான பிரச்சனைகள் சரியாகும். உலர் திராட்சைகளை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள புற்றுநோய் காரணிகளை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. சிறுநீரக கற்கள் கரையும். இரத்த சோகை பிரச்சனை சரியாகும். மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

 

5. பேரிச்சம் பழம்

 

அனீமியாவை குணமாக்கும். புதிய இரத்த செல்களை உருவாக்கி இரத்த உற்பத்தியை அதிகரிக்கும். இரத்த அளவு சீராக இருக்கும். இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரண்டு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். பேரிச்சம் பழத்தில் இருக்கும் கால்சியம், மெக்னீசியம், செலினியம், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்தி எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றது. பெண்கள் மற்றும் வயதானவர்கள் கட்டாயமாக சாப்பிட வேண்டும். பேரிச்சம் பழம் வயாதான பிறகு நம் உடலில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை சரி செய்கின்றது. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை குணப்படுத்துகின்றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வரலாம்.