T20 உலக கோப்பை – ஐசிசி முக்கிய முடிவு

0
71

கொரோனா நோய்த் தொற்று காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் உட்பட பல விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் 20 ஓவர் உலக கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸிதிரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொடர்த்து உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால் திட்டமிட்டப்படி உலக கோப்பை போட்டிகள் நடைபெறுமா என்று விவாதம் எழுந்தது.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவின் எல்லைகள் செப்டம்பர் மாதம் வரை மூட அந்த நாட்டின் அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு பயணிகளுக்கு இரண்டு வாரம் தனிமைப்படுத்து கொள்ள வேண்டும் என்ற சட்டவிதிமுறை நடைமுறை படுத்தப்பட்டிருப்பதால் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

இந்நிலையில் ஐசிசியை சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலமாக இந்த வாரம் நடைபெற உள்ளது. இதில் இந்த போட்டிகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

அதில் இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை அடுத்த வருடம் பிப்பரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்த ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் ஐசிசியின் அடுத்த தலைவர் மற்றும் தேர்தல் நடத்தப்டும் தேதி உள்ளிட்டவற்றை பற்றியும் முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

author avatar
Parthipan K