இது இல்லையென்றால் என்னால் இருக்க முடியாது! அந்த இடத்தில் வெட்டிய சைக்கோ கணவன்!

0
80
A teenager from a home care company was involved in theft! Police investigation!
A teenager from a home care company was involved in theft! Police investigation!

இது இல்லையென்றால் என்னால் இருக்க முடியாது! அந்த இடத்தில் வெட்டிய சைக்கோ கணவன்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாக்குலத்தினை சேர்ந்தவர் முனீஸ்வரி. ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர்கள் இருவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முனீஸ்வரர் மதுவிற்கு அடிமையான காரணத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

மேலும் அவரது மனைவி முனீஸ்வரியின் நகைகளை விற்று மது அருந்தியுள்ளார். இந்நிலையில்  அவ்வப்போது மது அருந்துவதற்காக பணம் வேண்டும் என்று கேட்டு முனீஸ்வரன் அவரது மனைவி முனீஸ்வரியை துன்புறுத்தி வந்துள்ளார். முனீஸ்வரி கணவனின் தொல்லை தாங்க முடியாமல் சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் பல்லாக்குளத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பல்லாகுளத்திற்கு சென்ற முனீஸ்வரன் பணம் வாங்கி வராமல் இங்கு இருப்பது ஏன் என்று கூறி அவரது மனைவியுடன் தகராறில்  ஈடுபட்டுள்ளார். அந்த தகராறில் முனீஸ்வரன் அவரது மனைவியின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளார். மேலும் அந்த சம்பவத்தில் காயம் அடைந்த முனீஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் மீட்டு  தூத்துக்குடியில் உள்ள  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இது குறித்து சூரங்குடி காவல்நிலையத்தில் முனீஸ்வரியின் தந்தை புகார் அளித்தார். மேலும் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனீஸ்வரனை தேடி வந்த நிலையில் முனீஸ்வரன் தலைமறைவாகிவிட்டார். மேலும் தீவிர தேடுதலுக்குப் பிறகு முனீஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

author avatar
Parthipan K