ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த தடை – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

0
62

கொரோனா நோய் தொற்றுக்கு அறிகுறிகள் அடிப்படையிலேயே தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி உலக அளவில் நடைபெற்று வரும் நிலையில் மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதாகத் தகவல் வெளியானது.

இதனையடுத்து இந்தியாவிலிருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டுக்கு தேவையான அளவு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா தரா விட்டால், இந்தியாவுடனான உறவுகளை அமெரிக்கா பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என மிரட்டும் தொனியில் அறிவிக்க, இந்தியா அதற்கு அடி பணிந்தது.

இந்தியாவில் மருத்துவரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வழங்க வேண்டும் என மருந்து கடைகளுக்கு அறிவிப்புகள் அனுப்பபட்டன.

இந்நிலையில் இறப்பு விகிதம் அதிகம் ஏற்படுத்துவதால், கோரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை உலக சுகாதார அமைப்பு (WHO) தடை செய்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பை சேர்ந்த டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் “பாதுகாப்பு குழு தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியத்தால் மதிப்பாய்வு செய்யப்படும்போது, ​​ஒற்றுமை சோதனைக்குள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கையின் தற்காலிக இடைநிறுத்தத்தை நிர்வாக குழு செயல்படுத்தியுள்ளது. சோதனையின் மற்ற மருந்துகள் தொடர்கின்றன” என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய ஆய்வின்படி, ஆண்டிவிமலரியல் மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உடன் கொரோனாவுக்கு சிகிச்சை ஆண்டிபயாடிக் அஜித்ரோமைசினுடன் அல்லது இல்லாமல், COVID-19 நோயாளிகளுக்கு எந்த நன்மையும் அளிக்காது. அண்மையில் தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, COVID-19 நோயாளிகளிடமிருந்து தரவுகளை பகுப்பாய்வு செய்தது, அவர்கள் குளோரோகுயின் அல்லது அதன் அனலாக் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றைப் பயன்படுத்தி பெற்றுள்ளனர்.

இது அஜித்ரோமைசின் அல்லது கிளாரித்ரோமைசின் மற்றும் 81,000 கட்டுப்பாடுகள் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் எடுக்கப்பட்ட தகவல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K