சேலம் மாவட்டத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவன்! காதல் மனைவி கைது!

0
101
husband-who-floated-in-the-flood-of-blood-in-salem-district-love-wife-arrested
husband-who-floated-in-the-flood-of-blood-in-salem-district-love-wife-arrested

சேலம் மாவட்டத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவன்! காதல் மனைவி கைது!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி 11 வது வார்டு பகுதி சேர்ந்தவர் முருகன் என்ற சதீஷ் (42). இவர் விவசாயத்தில் கூலித்தொழில் செய்து வருகிறார். மேலும் இவருடைய மனைவி வனிதா (30) இவர் எம் ஏ, பி எட் பட்டதாரி ஆவார் மேலும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடித்து வனிதா வீட்டிற்கு வந்தார் நிலையில் வீட்டிற்குள் நுழையும் பொழுது அங்கு முருகன் என்ற சதீஷ் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அந்த அரை முழுவதும் ரத்தம் படிந்து இருந்தது அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அவரது கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வனிதாவின் வீட்டிற்கு வந்தனர். மேலும் அங்கு சதீஷ் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் கெங்கவள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அல்லி முத்து மற்றும் போலீசார் சதீஷ் உடல் அருகில் காய்கறி நறுக்கும்  கத்தி ஒன்று கிடந்தது.

மேலும் சதீஷ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார் என்பதையும் உறுதி செய்தனர். மேலும் அவரது கையிலும் நரம்பு அறுக்கப்பட்டிருந்தது. மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் விரைந்து வந்து பார்வையிட்டார்.  மேலும் சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தடவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சதீஷின் வீட்டில்இருந்து பத்திர பதிவு ஆலுவலகம் வரை ஆய்வு   நடத்தினார்கள். மோப்பநாய்  லில்லி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. மேலும் சதீஸ் இறந்த கிடந்த இடத்தில் இருந்து அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகம் வரை சென்று திரும்பி வந்தது.

மேலும் அங்கு இருந்த  கத்தியை போலீசார் மீட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் சதீஷ் மற்றும் வனிதாவும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரது பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏழு வயதில் சர்வேஷ்  என்ற மகன் உள்ளார்.

மேலும் அந்த சிறுவன் வனிதா பணிபுரியும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. மேலும் சதீஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையானதும் தெரிய வந்தது. மேலும் அதனால் குடும்பச் செலவிற்கு அவ்வப்போது கடன் வாங்கியதும் தெரிய வந்தது. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒரு கட்டத்தில் தான் வசிக்கும் வீடு மற்றும் தனது நிலத்தை ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்ததாகவும் தெரிகிறது.

அடமானம் பணம் வந்ததும் கடனை அடைக்க நினைத்ததும் வீட்டை விற்க சதீஷ் முடிவு செய்துள்ளார். இந்த விவரம் எதையும் வனிதா தெரிந்துகொள்ளாமல் இருந்ததாக தெரியவந்தது. இதற்கிடையே நேற்று காலையில் வனிதா பள்ளிக்குச் சென்ற நிலையில் சதீஸ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்அவரை  அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்து வனிதாவை போலீசார் கெங்கவல்லி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Parthipan K