கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய கொலைகார மனைவி! அம்மிக் கல்லால் ஆயுளை முடித்த கொடூரம்..!!

0
119

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய கொலைகார மனைவி! அம்மிக் கல்லால் ஆயுளை முடித்த கொடூரம்..!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அம்மிக்கல்லை போட்டு கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான படவெட்டிக்கு நளா என்கிற மனைவியும், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் தனது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலையத்திற்கு நளா அதிர்ச்சியுடனர புகார் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கொலைப்பற்றிய பிண்ணனியை தொழிலாளி படவெட்டி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். கணவர் குடித்துவிட்டு இரவில் சண்டைபோட்டதாக நளா கூறினார்.

மது போதையில் மகளிடமே தவறாக நடக்க முயன்றதாகவும், அதனால் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக மகளே அம்மிக்கல்லை தூக்கி தந்தையின் தலையில் போட்டதாகவும் வாக்குமூலம் தெரிவித்தனர். இரவு 11 மணிக்கு நடந்த சம்பவத்தை தடுக்காமல் இருந்துவிட்டு காலையில் புகார் தெரிவித்த காரணத்தால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது.

படவெட்டி கரும்பு வேலைக்காக வெளியூர் செல்லும்போதெல்லாம், நளா தனது அக்கா மருமகனான ரங்கசாமியுடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அறிந்த படவெட்டி கோபத்துடன் மனைவியை கண்டித்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படவே தாயார் வீட்டிற்கு நளா சென்று அங்கேயே கூலி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மாமியார் வீட்டிற்கும் சென்றும் பனவெட்டி பிரச்சினை செய்துள்ளார்.

இந்நிலையில் தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட தனது மகளை பகடை காயாக பயன்படுத்தியது முழு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் நளா மற்றும் அவரது கள்ளக்காதலரான ரங்கசாமி இருவரையும் கைது செய்தனர். தவறான உறவிற்காக தாலி கட்டிய கணவனையே தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



author avatar
Jayachandiran