வேறு பெண்ணுடன் மணிக்கணக்கில் அரட்டை அடித்த கணவன்! ஹோட்டல் அதிபரின் மனைவி மற்றும் மகள் செய்த பதைபதைக்க வைத்த காரியம்!

0
85
Husband chatting for hours with another woman! The hotel principal's wife and daughter did the talking thing!
Husband chatting for hours with another woman! The hotel principal's wife and daughter did the talking thing!

வேறு பெண்ணுடன் மணிக்கணக்கில் அரட்டை அடித்த கணவன்! ஹோட்டல் அதிபரின் மனைவி மற்றும் மகள் செய்த பதைபதைக்க வைத்த காரியம்!

சென்னையில் பாடி கலைவாணர் நகர் இயேசுநாதர் தெருவைச் சேர்ந்த நபர் அசோக் ராஜபாண்டி என்பவர். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் மனைவி ராஜலட்சுமி 38 வயதானவர், சிவதர்ஷினி என்ற 17 வயது மகள் மற்றும் சிவனேசன் என்ற  11 வயது மகனுடன் உள்ளனர். சிவதர்ஷினி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பும்,  மகனும் அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள்.

அசோக் ராஜபாண்டி அதே பகுதியில் சொந்தமாக ஓட்டல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்ததும், கதவை திறந்ததும்  அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அப்போது அவருடைய மனைவி ராஜலட்சுமி மற்றும் சிவதர்ஷினி இருவரும் வீட்டின் ஹாலில் உள்ள மின் விசிறிகளில் தனித்தனியாக தூக்கில் தொங்குவதைக் கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் விட்டார்.

அதன் பின் உடனடியாக மனைவி மற்றும் மகள் இருவரையும் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்களோ, அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஜே.ஜே நகர் காவல் நிலைய போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது ராஜ பாண்டி வேறொரு பெண்ணுடன் அடிக்கடி கைபேசியில் பேசுவது தெரிய வந்தது. நீண்ட நேரம் அவ்வாறு பேசி வந்ததன் காரணமாக, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும், தனித்தனியே பேச்சுவார்த்தை இல்லாமல் வசித்து வருகின்றனர்.

இதில் திடீரென்று மனமுடைந்த மனைவி ராஜலட்சுமி மற்றும் தனது 17 மகளும் வீட்டில் ஒரே இடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.