லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலன் மீது கொலைவெறி தாக்குதல்! கோவையில் சாகக்கிடக்கும் ஜோடி!

0
89
Homicidal attack on boyfriend while living in Living Together mode! Dead couple in Coimbatore!
Homicidal attack on boyfriend while living in Living Together mode! Dead couple in Coimbatore!

லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலன் மீது கொலைவெறி தாக்குதல்! கோவையில் சாகக்கிடக்கும் ஜோடி!

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளில் இருந்து கடைபிடிப்பதை போல புதிய கலாச்சாரங்கள், பன்னாட்டு முறை என்று பல்வேறு பெயர் வைத்து அந்நிய நாட்டு கலாச்சாரங்கள் பலவற்றையும் நம் நாட்டில் நாம் பின்பற்றி வருகிறோம். அதில் பல மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆண், பெண் இணைந்து வாழ்வது சகஜமான ஒன்றாக தற்போதைய காலகட்டங்களில் ஆகிவிட்டது.

இந்நிலையில் கோவை பகுதியிலும் ஒரு ஜோடி இதே போல வாழ்ந்து வருகின்றனர். கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் செய்து கொள்ளாமலேயே காதலர்கள் இணைந்து வாழ்கின்றனர். ராகேஷ் மற்றும் சுகந்தி என்ற இரண்டு நபர்கள் தான் அவர்கள்.

அவர்கள் இருவரும் காதலர்கள் லிவிங் டுகெதர் முறையில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஆரம்பித்து உள்ளது. அதன் காரணமாக அவர்களுக்குள் சண்டைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எனவே  இருவருக்குள்ளும் மனக்கசப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று காதலன் ராகேஷ் மீது சுகந்தி ஆசிட் வீசியதோடு, கத்தியால் குத்தியும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

அவ்வாறு காதலனை தாக்கியதோடு, அவரும் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து தற்போது இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அரசு மருத்துவமனையில் இருவருமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் காதலர்கள் இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆனால் சேர்ந்து வாழும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக காதலன் மீதே அந்த பெண் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.