இதை தடவினால் கழுத்துவலி இனி இருக்காது!

0
54

இன்றைய காலத்தில் அனைவரும் அதிகமாக உட்கார்ந்துகொண்டே வேலைபார்ப்பதனால் மேலும் செல்போன் மற்றும் லேப்டாப் அதிகமாக பயன்படுத்துவதால் கழுத்து வலி ஏற்படுகிறது. அந்த கழுத்து வலியை உடனடியாக போக்க இயற்கை முறை ஒன்றை இங்கு பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்:

1. நல்லெண்ணெய் 200 மில்லி

2. வேப்பிலை ஒரு கப்

3. முருங்கைக்கீரை ஒரு கப்.

செய்முறை:

1. ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்துக் கொள்ளவும்.

2. இது 200 மில்லி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

3. நன்கு எண்ணெய் காய்ந்ததும் ஒரு கப் வேப்பிலையைப் போடவும். வேப்பிலை நன்கு பொரியும் சத்தம் கேட்கும்.

4. பின் ஒரு கப் முருங்கை கீரையை சேர்த்துக் கொள்ளவும்.

5. இரண்டும் எண்ணெயில் கருகாமல் மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.

6. பிறகு எண்ணெய் மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இந்த எண்ணெயை கையில் எடுத்து கழுத்து முழுவதும் நன்றாக தேய்த்து விடவும். வீட்டில் யாரேனும் இருந்தால் தேய்த்துவிட சொல்லவும்.

இப்படி தினமும் செய்து வர உடனடியாக கழுத்து வலி பறந்து போகும்.

author avatar
Kowsalya