தலைமுடி நீளமாக கருகருவென வளர்வதற்கு இதை யூஸ் பண்ணுங்க!

0
88

தலைமுடி நீளமாக கருகருவென வளர்வதற்கு இதை யூஸ் பண்ணுங்க!

தலைமுடி நீண்டு வளர வேண்டும் ஆரோக்கியமாக தலைமுடி இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. சிலருக்கு முடி கொட்டினாலே மன அழுத்தம் ஏற்படும். நீங்கள் உங்களின் கூந்தலுக்கு மிகுந்த கவனம் அளிக்க வேண்டும். கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தினால் உங்களது கூந்தல் மிகவும் நீளமாகவும், மென்மையாகவும்,மிகவும் வலிமையுடனும் இருக்கும். கீழே கூறப்பட்டுள்ள முறையானது மிகவும் எளிமையானது. அதை பயன்படுத்தி உங்கள் முடி வளர்வதை கண்கூடாக காணுங்கள்.

கீழே உள்ள முறைகளை பயன்படுத்தி எப்படி கூந்தலை வீட்டிலேயே நீளமாக வளர்க்கலாம் என்று பார்க்கலாம்.

முறை 1:

1. ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து கொள்ளவும். அதன் தோல்களை உரித்துக் கொள்ளவும்.
2. அதனை நான்கைந்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
3. வெட்டிய துண்டை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்தவுடன் அந்த விழுதை ஒரு துணியில் போட்டு வடிகட்டி நீரை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
5. அந்த நீரை உங்களது தலையில் நன்றாகத் தேய்த்து விடுங்கள்.

அரை மணி நேரம் கழித்து நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்பூ வைத்து தலைக்கு குளியுங்கள்.
வெயிலில் காய வைய்யுங்கள்.வாரத்திற்கு இருமுறை இப்படி செய்யும் பொழுது உங்கள் கூந்தல் வளர்வது கண்கூடாக நீங்கள் பார்க்கலாம்.

முறை 2:

1. இரண்டு அல்லது மூன்று உருளைக்கிழங்குகளை எடுத்து கொள்ளவும்.
2. அதன் தோலை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
3. வெட்டிய துண்டை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
4. அந்த விழுதை எடுத்து வடிகட்டி நீரை எடுத்துக் கொள்ளவும்.
5. அந்த தண்ணீரை தலையில் நன்கு மயிர்கால்களுக்கு படும்படி நன்கு தேய்த்து விடவும்.
6. அரைமணி நேரம் ஊறிய பின் தலையை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு போட்டு குளியுங்கள்.
7.இதனை வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்கள் கூந்தல் மிகவும் மென்மையாக மாறுவதை நீங்கள் பார்க்க முடியும்.

மேலே கூறப்பட்டுள்ள முறைகள் அனைத்தும் மிகவும் எளிமையானவை. வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த முறையை பயன்படுத்தி கூந்தல் வளர்வதையும் மற்றும் பட்டுப் போன்று மென்மையாக மாறுவதையும் உங்களால் காண முடியும்.

author avatar
Kowsalya