ஜெயலலிதாவின் அதிகார்வபூர்வ வாரிசுகள்! – அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

0
87

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டினை நினைவில்லமாகவும், அவ்விடத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் அலுவலகமாகவும் மாற்ற அரசு சார்பில் கடந்த வருடம் வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கின் தீர்ப்பு இன்று மே-27 இல் வெளியானது. ஜெயலலிதாவிற்கு சொந்த வாரிசுகள் இல்லாத நிலையில், இரண்டாவது வாரிசுகளாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவையும் , மகன் தீபக்கையும் அதிகாரப்பூர்வாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.

மேலும் போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாகவும், ஒரு பகுதி முதலமைச்சர் அலுவலகமுமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசிற்கு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பில் ஏற்பட்ட பரபரப்பு உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பினால் இன்றும் நிலவியது.

author avatar
Parthipan K