கண்ணை மறைத்த கள்ளகாதல்! 4-வது காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்! 

0
113
#image_title

கண்ணை மறைத்த கள்ளகாதல்! 4-வது காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்! 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புதுவடவள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் . இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள புதூர்காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலைவாணி வயது 26, என்ற மனைவியும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

அதே செங்கல் சூளையில் தங்கி  வேலை செய்து வருபவர் மல்லேஷ். சக்திவேலும், மல்லேஷ்- உம் ஒரே இடத்தில வேலை செய்வதால் சக்திவேலின் மனைவியுடன் மல்லேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டு , நாளடைவில் அந்த பழக்கம் கள்ளகாதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது சக்திவேலுக்கு தெரிய வரவே அவர் கலைவாணியை கண்டித்து உள்ளார்.

இருப்பினும் கலைவாணி மல்லேஷ் உடன் இருத்த பழக்கத்தை விட முடியாமல் தவித்துள்ளார். ஒருநிலைக்கு மேல் அவரை மறக்க முடியாமல் தனது பெண்குழந்தையை தூக்கிக்கொண்டு மல்லேஷ் உடன் ஓட்டம் பிடித்தார். இருவரும் ஓமலூர் அருகே புதூர் காடம்பட்டியில் புதியதோர் வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். மேலும் அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் கணவன் மனைவி என்று கூறி வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் நாளடைவில் மல்லேஷ்க்கு கலைவாணியின் குழந்தை மீது வெறுப்பு வந்தது. வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை நான் வளர்ப்பதா? என்று நாளுக்கு நாள் அந்த பிஞ்சு குழந்தையின் மீது வன்மம் வளர்ந்துக்கொண்டே சென்றது.

இந்நிலையில் கலைவாணியும் மல்லேஷ்-உம் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் இருவரும் உல்லாசமாக இருக்கவே  திடீரென குழந்தை அழுதுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இரண்டு பேரும் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் குழந்தையை தூக்கி சுவற்றில் அடித்துள்ளனர். இதில் குழந்தைக்கு அடிப்பட்டு இரத்தம் வெளியேறியுள்ளது.

ஆனால் இருவரும் மறுநாள் காலை தான் குழந்தையை ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தை கவலைக்கிடமாக இருக்கவே சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதையடுத்து குழந்தை இறந்த தகவல் தாரமங்கலம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணைக்கு வரவே இருவரும் தலைமறைவாகிவிட்டனர். போலீசார் இருவரையும் தேடி வரவே கர்நாடகாவில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து இருவரையும் போலீசார் அங்கு சென்று கைது செய்தனர்.

இருவரையும் தீவிர காவலில் எடுத்து விசாரணை செய்யவே பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கலைவாணிக்கு 3 பேருடன் திருமணமாகியுள்ளது. மல்லேஷ் அவருக்கு நாலாவது ஆளாம். கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.