ஆபத்து நிறைந்திருக்கும் பிஸ்கட்டுகள்:! குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்! எச்சரிக்கை!!

0
149

ஆபத்து நிறைந்திருக்கும் பிஸ்கட்டுகள்:! குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்! எச்சரிக்கை!!

6 மாதத்திலிருந்தே குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகள் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றோம்.அதுவும் சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காலையில் எழுந்தவுடனே பாலும் பிஸ்கட்டும் கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
ஆனால் அதிக அளவு பிஸ்கட்டை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம் என்பது எத்தனை பேர் அறிந்துள்ளோம்??

ஆம் பிஸ்கட்டுகளில் சுவைக்காக சுக்ரோஸ் எனப்படும் வெள்ளை சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து,இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வர வழி வகுக்கும் அபாயம் உள்ளது.

உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட் போன்றவற்றை கலக்கப்பட வாய்ப்புள்ளது.இந்த சோடியம் கார்பனேட் அளவுக்கு அதிகமாக உடலுக்குள் சென்றால் குழந்தைகளுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

சில பிஸ்கட் பாக்கெட்டுகளில் சுகர் பிரீ பிஸ்கட்டுகள் என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த பிஸ்கட்டில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சோளமாவு ,சுகர் சிரப், போன்றவை சுவைக்காக சேர்க்கப்பட்டிருக்கும்.இதனால் உடலில் மெட்டபாலிசம் குறைவதோடு கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

சாதாரண பிஸ்கட்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் க்ரீம் பிஸ்கட் இன்னும் ஆபத்தானவை ஏனெனில் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ப்ளேவர்கள் மற்றும் நிறங்கள் அதிகம் ரசாயன தன்மை வாய்ந்தது.

பிஸ்கட்டுகள் மைதாமாவில் தயார் செய்யப்படுவதால்,
குழந்தைகளுக்கு பசியின்மை மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன.அதிலும் காலை வேளைகளில் குழந்தைகளுக்கு பாலுடன் பிஸ்கட்டை சேர்த்து கொடுக்கும்பொழுது, அவர்களுக்கு உடலின் கொழுப்பு சக்தியை அதிகரித்து குழந்தைகள் மந்த நிலைக்கு தள்ள காரணமாகின்றது.

மேலும்மேலும் குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகள் தருவதினால் அருமையான செரிமான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

முடிந்த அளவிற்கு குழந்தைகளாகட்டும், பெரியவர்களாகட்டும் பிஸ்கட்டுகள் அதிகம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.முடிந்தவரை வீட்டில் செய்த தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்க வேண்டும்.
குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர்களாகிய நமது கையிலே உள்ளது.

author avatar
Pavithra