அடிக்கடி சிறுநீர் வருகிறதா? கட்டுப்படுத்த முடியவில்லையா? இதை ஒரு ஸ்பூன் சுடுநீரில் கலந்து குடித்தால் சரியாகும்!

0
170

அடிக்கடி சிறுநீர் வருகிறதா? கட்டுப்படுத்த முடியவில்லையா? இதை ஒரு ஸ்பூன் சுடுநீரில் கலந்து குடித்தால் சரியாகும்!

சர்க்கரை நோயினால் அடிக்கடி சிறுநீர் வருகிறது கட்டுப்படுத்த முடியவில்லை என்று எத்தனையோ பேர் சொல்லி கேட்டிருப்போம். நாம் உணர்ந்தும் இருப்போம்.

சர்க்கரை நோய் நமது சிறுநீரகத்தை பாதிப்பதால், சிறுநீரகம் தனது செயலை இழந்து சிறுநீர் வரும் உணர்வே இல்லாததை போல் சிறுநீர் கழித்து விடுவார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு, சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டு வந்து அடிக்கடி சிறுநீர் கழிப்பது சரியாகும்.

தேவையான பொருட்கள்:

1. சிறுகுறிஞ்சான் – 50கிராம்

2. நாவல் கொட்டை – 50

3. ஆவாரம் பூ – 100 கிராம்

4. பன்னீர் பூ – 100 கிராம்

செய்முறை:

1. மேற்கூறிய அனைத்து பொருட்களையும் நன்றாக சம அளவு எடுத்து வெயிலில் காய வைத்து பொடி செய்து எடுத்து கொள்ளவும்.

2. ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் 200 மில்லி சுடுநீரில் கலந்து உணவுக்கு முன் காலை மாலை குடித்து வந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும்.

3. சிறுநீர் அடிக்கடி கழிப்பது சரியாகும்.

author avatar
Kowsalya