பக்க வாதத்தால் செயல்படாத கை,கால் உறுப்புகளை செயல்பட வைக்கும் வீட்டு மருத்துவம்!

0
97

பக்கவாதம் என்பது இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் உடம்பில் அதிகமாகி மூளை நரம்புகளை பாதித்து மூளையின் செயல்பாட்டை குறைத்து உடலின் இயக்க செல்களை அழித்து விடுவதால் வாதம், பக்கவாதம், முகவாதம் போன்ற வாதங்கள் ஏற்படுகின்றன.

இனிப்பு சுவை உடலில் அதிகமாகும்போது புளிப்பு சுவை மேலோங்கி மேலும் மேலும் வளர்ந்து மூளையை தாக்குகின்றன.நாம் சாப்பிடும் மாவுசத்து நிறைந்த பொருட்கள் புளித்த பொருட்கள் ஆகியவை உடல் உழைப்பு இல்லாத காரணங்களால் ரத்த குழாயில் படிந்து கொழுப்பாக மாறி விடுகின்றன. இதனை சரிசெய்யும் அற்புத மருந்தை தான் பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. மிளகு 50 கிராம்

2. நல்லெண்ணெய் அரை லிட்டர்

செய்முறை:

1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் 50 கிராம் மிளகை போடவும்.

2. மிளகை நன்றாக தூளாக்கவும்.

3. இப்பொழுது வானலி சட்டியில் அரை லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றவும்.

4. பொடித்து வைத்த 50 கிராம் மிளகை நல்லெண்ணையுடன் சேர்க்கவும்.

5. நன்கு காய்ச்சி ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

6. இந்த எண்ணெய் செயல்படாத உறுப்புகளின் மீது காலை மதியம் மாலை என அனைத்து நேரங்களிலும் நன்றாகத் தேய்த்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிக்க செல்லலாம்.

7. இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்து வர செயல்படாத உறுப்புகளும் செயல்படும்.

8. அதேபோல் ஜாதிக்காய் உடன் தண்ணீர் சேர்த்து பருகி வர வாதம் குணமாகும்.

9. அதேபோல் வசம்பை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர வாதம் குணமாகும்.

author avatar
Kowsalya