இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர் 

0
190

இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர் 

ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்க மாட்டார்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட்ட போட்டி என்பதால் இதில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்த தொடரை கைப்பற்ற பெரும் முயற்சி செய்து வருகிறது.

பெரும்பாலும் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் நடந்தால் அங்கு சுழற் பந்துவீச்சாளர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றார் போல்  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு பிட்ச் அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. ஜடேஜா, அக்சர், குல்தீப், அஸ்வின் ஆகிய முன்னணி சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். அதேபோல் ஆஸ்திரேலியா அணியில் நாதன் லயன், ஆஷ்டன் அகர் போன்ற சுழற்பந்து வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் எந்த அளவு தாக்குதல் கொடுப்பார்களோ அதே அளவு ஆஸ்திரேலியா வீரர்களும் இந்திய அணிக்கு தாக்கம் அளிப்பர். 

ஆஸ்திரேலிய வீரர்கள் பிட்ச் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த போதிலும் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஸ்பின்னுக்கு ஏற்ற வகையில் தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பேட்டிங் வீரர்கள் இந்தியாவின் இளம் ஸ்பின்னர்களை அழைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு நாதன் லியோனை விட வேறொருவர் தான் அச்சுறுத்தலாக இருப்பார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியுள்ளதாவது,

நாதன் லியோனை விட வேக பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிப்பவராக இருப்பார். அவர் முதன் முதலில் 5 விக்கெட் ஹவுல் எடுத்தது ஆசிய கண்டத்தில் தான். லியோன் எப்போதும் அச்சுறுத்தல் தரும் ஒரு டாப் பவுலர். ஆனால் இந்திய மண்ணில் கம்மின்ஸ் போன்ற அட்டகாச பவுலர் தான் எதிர்பார்க்காத தாக்கத்தை ஏற்படுத்துவார். இதை கடந்த கால ஆட்டங்களில் நாம் கண்டிருப்போம்.

ஆஸ்திரேலியா அணி இத்தனை காலமாக வெற்றிகரமான அணியாக இருப்பதற்கு காரணம் அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்களின் திறமை தான். ஜோஸ் ஹசல்வுட் முதல் போட்டியில் இருந்து விலகி உள்ளார் அதனால் கம்மின்சை மட்டும் இந்திய வீரர்கள் எப்படியாவது சமாளித்து விட்டால் இந்திய அணிக்கு நல்லது.

கிரிக்கெட்டை பொருத்தவரை இந்த இரு அணிகளுமே அற்புதமான அணிகள். யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிப்பது மிக கடினம். ஆனால் உள்ளூர் அணியை பொறுத்தவரை பிட்ச் தன்மை, ரசிகர்கள் ஆதரவு, வானிலை நிலவரம், ஆகியவற்றை தெளிவாக கணிக்க முடியும். எனவே உள்ளூர் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வெள்ளை பந்து  கிரிக்கெட் ஆட்டத்தில் குல்தீப் யாதவின் ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் கேப்டனுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளார். அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவராக உள்ளார். என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.