புழுவெட்டால் பாதிக்கப்பட்டு முடியை இழந்தவர்களா? இந்த ஒரு காய் போதும்!

0
195
#image_title

புழுவெட்டால் பாதிக்கப்பட்டு முடியை இழந்தவர்களா? இந்த ஒரு காய் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு அதனை சரி செய்து கொள்ள.ஆனால் நமது முன்னோர் காலத்தில் சர்க்கரை நோய் என்பது யாரோ ஒருவர் அல்லது இருவருக்கு தான் இருக்கும். தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான சிகிச்சை மேற்கொள்ள செல்பவர்களில் சர்க்கரை நோய் உடையவர்களே அதிகம் என கூறப்படுகிறது. இவ்வாறு

சர்க்கரை நோய் உள்ளவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும். இது மிகச்சிறந்த மருந்தாகவும் செயல்படுகிறது.

நமது எடையை கட்டுப்பாட்டில் வைக்க புடலங்காய் உதவுகிறது.நீருடன் புடலை இலைச் சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரை, தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை வராது.

மேலும் இவை காய்ச்சலையும் கட்டுப்படுத்த சிறந்த மருந்தாக உள்ளது.புடலை இலை குடல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது.புழுவெட்டால் பாதிக்கப்பட்டு, முடியை இழப்போருக்கு புடலங்காய் இழந்த முடியை மீட்டுத் தரும். மேலும் இந்த

புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு இருக்கின்றது. நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும்.புடலங்காயில் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவு இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை உடையவை

author avatar
Parthipan K