பிறந்த நாளன்று துப்பாக்கி சூடு நடத்தி இருவரை கொன்ற பள்ளி மணவன்! காரணம் என்ன?

0
89

பிறந்த நாளன்று துப்பாக்கி சூடு நடத்தி இருவரை கொன்ற பள்ளி மணவன்! காரணம் என்ன?

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் மாணவன் ஒருவர் தன்னுடைய16-வது பிறந்த நாளன்று  பள்ளி வளாகத்திலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அந்த மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த பள்ளியை சேர்ந்த16 வயது சிறுமியும் 14 வயது சிறுவனும் இறந்துள்ளனர். இவர்களை மட்டுமல்லாமல் மேலும் மூன்று பேரையும் சுட்டுவிட்டு, அந்த மாணவன் தன்னுடைய தலையிலும் சுட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய பிறந்த நாளன்று ஆடை அணிந்த வந்த அந்த  மாணவன் துப்பாக்கியால் மற்ற சிறுவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் அவர்கள் வகுப்புகளை விட்டு வெளியே வரமுடியாமல் மாட்டி கொண்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பள்ளி அறைகளில் மாணவர்கள் பதுங்கிக் கிடந்த நிலையில் பெற்றோர் பெரும் பதற்றத்துடன் என்ன நடக்கிறது என்று புரியாமல் காத்திருந்தனர். இறுதியில் ஒருவழியாக துப்பாக்கியால் சுட்ட அந்த சிறுவனை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.

இதனையடுத்து அவனை சுட்டுப் பிடித்துள்ள காவல் துறையினர் ஏன் அப்படி துப்பாக்கி சூடு நடத்தினான் என்று அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீக காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வரும் நிலையில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சிறுவர்களே இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து பள்ளிகளில் மாணவர்களுக்கு இதுபோன்ற நேரங்களில் என்ன செய்வது,எப்படி தங்களை தற்காத்து கொள்வது என்பது பற்றிய பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

இந்த சம்பவமானது இந்த ஆண்டில் பள்ளி வளாகத்தில் நடந்த  85 வது துப்பாக்கிச் சூடு ஆகும்.

author avatar
Ammasi Manickam