பேத்தியை கழுத்தை நெறித்து கொன்ற பாட்டி… சேலம் அருகே நடந்த கொடூர சம்பவம்..!

0
171

4 வயது பேத்தியை கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விமல்குமார்.இவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும் 4 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் மேகலா பிரசவத்திற்காக சென்ற அவர் தனது தாயார் வீட்டிற்கு சென்றார். அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், மேகலாவின் தாயார் சாந்திக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேகலா வெளியில் இருந்த நிலையில், அவரது 4 வயது மகளின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அங்கு சென்று பார்த்த போது சாந்தி பேத்தியின் கழுத்தை நெறித்து கொண்டிருந்துள்ளார்.

அவரிடமிருந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.