பேருந்தில் ஏறும் இவர்களை இழிவு படுத்த கூடாது! நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

0
62

அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் தொடர்பாக ஒரு சில அறிவுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது அவர்களுக்கு எரிச்சலூட்டும் விதத்திலோ, அல்லது ஏளனமாகவும், இழிவாகவும், நடத்தக்கூடாது என்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக அனைத்து தமிழக அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு போக்குவரத்து கழகங்களின் முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர் கோபால் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பேருந்து நிறுத்தங்களில் பேருந்திற்காக மாற்றுத்திறனாளி பயணிகள் நிற்கும்போது முறையாக பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும், ஒரு மாற்றுத்திறனாளி பயணி நின்றாலும் அவரை பேருந்தில் ஏற்றி செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பேருந்து நிற்பதற்காக குறிக்கப்பட்ட இடத்தில் பேருந்தை நிறுத்த வேண்டும். அதற்கு முன்பு அல்லது அதை கடந்து பேருந்தை நிறுத்தி அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளியை பேருந்தில் இடம் இல்லை என்று தெரிவித்து அவரை இறக்கி விடக்கூடாது, மாற்றுத்திறனாளி இருக்கையில் வேறு யாராவது அமர்ந்து இருந்தால் அவர்களை எழுப்பி மாற்றுத்திறனாளியை அமரச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எரிச்சல் ஊட்டும் விதத்தில் கோபமாகவோ, அல்லது ஏளனமாகவும், இழிவாக உரையாற்றக் கூடாது.

அவர்களை உபசரிப்பும் அன்புடனும் நடத்த வேண்டும் அவர்கள் ஏறும்போது மற்றும் இறங்கும்போது கண்காணித்து ஓட்டுனருக்குக்கு சைகை செய்து பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி விட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையை கொண்டு 40 சதவீதத்திற்கு மேல் ஊனம் கொண்ட மற்றும் அவர்களுடைய உதவியாளர் ஒருவருடன் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேருக்கும் உரிய இலவச பயணச்சீட்டை நடத்துனர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் மாநிலம் முழுவதும் பேருந்துகளில் பயணம் செய்யும் எண்ணிக்கை உச்ச வரம்பின்றி 75 சதவீத பயண கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.