தமிழ்நாட்டில் 8000க்கும் அதிகமான ஏரிகள் நிரம்பியிருக்கின்றன! தமிழக அரசின் புதிய தகவல்!

0
71

சென்ற 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்து இருக்கின்ற சூழ்நிலையில், மாநிலத்தில் சராசரி 3.6 மில்லிமீட்டர் என்று சொல்லப்படுகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 274.6 மில்லிமீட்டர் அதிக மழை பொழிவும் , தென்காசி மாவட்டம் ஆயக்குடி 101 மில்லி மீட்டர் மற்றும் தேனி மாவட்டம் பெரியாறு 81 மில்லிமீட்டர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தென்காசியில் 4 16 மில்லி மீட்டரும், தர்மபுரியில் 19.74 வலிமை தரும் திருச்சியில் 11. 66 மில்லி மீட்டரும், புதுக்கோட்டையில் 4 25 மில்லி மீட்டரும் திருவண்ணாமலையில் கன்னியாகுமரியில் 6.29 மீட்டரும், நாமக்கல் மாவட்டத்தில் 6.9 மீட்டரும், வேலூரில் 5.37 மில்லி மீட்டரும், ஈரோட்டில் 4.42 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் நேற்று வரையில் 683.4 மில்லிமீட்டர் பெய்திருக்கிறது.

நிவாரண முகாம்களை பொருத்தவரையில் சென்னையில் 257 நபர்கள் 3 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள், மற்ற மாவட்டங்களில் 2156 பேர் 36 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி இருக்கின்றன 1989 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருக்கின்றன. தமிழகத்தில் இருக்கின்ற 90 சதவீத நீர்த்தேக்கங்களில் ஒட்டு மொத்த கொள்ளளவான 224 .797 டிஎம்சி 6ம் தேதி நிலவரத்தின் அடிப்படையில் 212.00 9 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது 94.52% என்று சொல்லப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3231 மில்லியன் கன அடி தண்ணீரும், செங்குன்றம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் இரண்டாயிரத்து 970 மில்லியன் கனஅடி நீரும், சோழவரம் ஏரியில் 814 மில்லியன் கன அடி நீரும், வீராணம் ஏரியில் 894 மில்லியன் கன அடி நீரும், வீராணத்தில் 500 மில்லியன் கன அடி நீரும், மேட்டூரில் 93,470 மில்லியன் நீரும், பவானிசாகரில் 32,379 கன அடி நீரும், வைகையில் 5855 மில்லியன் கன அடி நீரும் இருக்கிறது.

சென்னையில் மழை நீர் தேங்கி இருக்கின்ற 6 இடங்களில் அதிக திறன் கொண்ட 26 பம்புகள் மூலமாக நீர் அகற்றப்பட்டு வருகிறது இதுவரையில் 19 ஆயிரத்து 740 மருத்துவ முகாம்கள் மூலமாக 6 லட்சத்து 48 689 நபர்கள் இதன் மூலமாக பயன் அடைந்திருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 உயிரிழப்புகள் பதிவாகியிருக்கிறது. 47 கால்நடைகள் இறந்திருக்கின்றன 633 குடிசைகள் பகுதியாகவும், 55 குடிசைகள் முழுமையாகவும், சேதமடைந்து இருக்கின்றன. ஆக மொத்தம் 688 குடிசைகளும், 100 வீடுகள் பகுதியாகவும், பதினைந்து வீடுகள் முழுமையாகவும், என்று ஒட்டுமொத்தமாக 115 வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. இதுவரையில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 811 ஹெக்டேர் வேளாண்மை பயிர்களும், 16 ஆயிரத்து 445 தோட்டக்கலை பெயர்களும், 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்து இருக்கின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 13 ஆயிரத்து 450 புகார்கள் வந்தது, அதில் 12 ஆயிரத்து 42 புகார்கள் தீர்வு காணப்பட்டன. மற்ற புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு வரப்பெற்ற 7 227 புகார்களில் 6 1937 புகார்கள் தீர்வு காணப்பட்டன. மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற 7040 புகார்களில் 6 ஆயிரத்து 958 புகார்கள் மீது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.