அரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி!

0
64
Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!
Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!

அரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி!

சமீபகாலமாக பேருந்து சம்பந்தப்பட்ட புகார்கள் தொடர்ந்து வருவது வழக்கமாக உள்ளது. பத்தாண்டுகள் கழித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியை கைப்பற்றினார். அந்த வகையில் பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப் பட்டது. அவற்றில் ஒன்றுதான் கட்டணமில்லா பேருந்து பயணம். இந்த கட்டணமில்லா பேருந்து பயண மூலம் பல பெண்கள் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். இருப்பினும் பெண்கள் அரசுப் பேருந்துகளில் செல்ல கட்டணம் வசூலுக்கு படாததால் சில நடத்துனர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் பெண்கள் நிற்கும் பேருந்து நிலையங்களில் பேருந்தை நிறுத்தாமல் செல்வது, கூட்டமாக உள்ளது அடுத்த பேருந்தில் வாருங்கள் என பெண்களை ஏற்க மறுப்பது என தொடர் புகார்கள் எழுந்து வருகிறது.

அந்த வகையில் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் கூறியது. அதுமட்டுமின்றி சமீப காலமாக பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்வதால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால்இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இதனை தடுக்க பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்ய தடை விதித்தனர். அதுமட்டுமின்றி அவ்வாறு பயணம் செய்ய அனுமதிக்கும் நடத்துனர் மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இவ்வாறு பல விதிமுறைகள் அரசாங்கம் தொடர்ந்து நடத்தினார் மட்டும் ஓட்டுநர்களுக்கு அமல்படுத்தி வருகிறது.

தற்பொழுது புதிதாக ஓட்டுநர்கள் பேருந்து ஓட்டும்போது தொலைபேசி பயன்படுத்த கூடாது என்று கூறி போக்குவரத்துத்துறை ஆணை பிறப்பித்துள்ளது. அவ்வாறு சிலர் பேருந்து ஓட்டும்போது தொலைபேசி பயன்படுத்துவதால் அதிக விபத்துக்கள் நடக்கிறது. இதனை தடுக்க போக்குவரத்து துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி நடத்துனர்கள் பேருந்தின் இறுதி இருக்கையில் அமர்ந்துகொண்டு படிக்கட்டுகளில் யாரேனும் பயணம் செய்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளனர். அவ்வாறு கூறும் நடவடிக்கைகளை தவறும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.