விமான போக்குவரத்து துறை  வெளியிட்ட குட் நியூஸ்! இங்கு இனி இரவிலும் பயணம் செய்யலாம்!

0
175
Good news released by aviation! You can also travel here at night!
Good news released by aviation! You can also travel here at night!

விமான போக்குவரத்து துறை  வெளியிட்ட குட் நியூஸ்! இங்கு இனி இரவிலும் பயணம் செய்யலாம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து போக்குவரத்து சேவை  அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனால் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது. அதனை தொடர்ந்து போக்குவரத்து சேவைகள் அனைத்து இடங்களுக்கும் படிப்படியாக தொடங்கியது. இந்நிலையில் கடந்த மாதங்களில் மாண்டஸ் புயலின் காரணமாக வானிலை சரியில்லை என விமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் தான் மீண்டு விமான சேவை தொடங்கப்பட்டது. மகராஷ்டிரா ஷீரடியில் இரவு விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஷீரடி விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமானங்கள் சேவை மேற்கொள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதித்துள்ளது.

இந்தியாவில் இருந்து எந்த பகுதி மக்களும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஷீரடியில் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஷீரடி இடையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விமான சேவை கிடைத்துள்ளது. அடுத்த மாதத்தில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கபடுகின்றது.