ஓய்வுதியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தமிழக அரசு அளித்த ஜாக்பாட்!

0
83
District level speech and essay competition! The first prize is Rs.10000!
District level speech and essay competition! The first prize is Rs.10000!

ஓய்வுதியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தமிழக அரசு அளித்த ஜாக்பாட்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வர உள்ளது. அகவிலைப்படி ஜனவரி மாதம் உயர்த்தப்பட்ட நிலையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் மீண்டும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சில்லறை பணவீக்கம் அதிகரிப்பதைப் பொருத்து அகவிலைப்படி பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை என ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படும்.

சில்லறை பணவீக்கம் அதிகரித்து விலை வாசி உயரும் போது அரசு ஊழியர்கள் அதில் பாதிக்காத வகையில் இருப்பதே அகவிலைப்படி.ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் இந்த வாரத்தில் வெளியாக உள்ளது. பிப்ரவரி மாதம் 5.85 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் மார்ச் மாதம் 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உணவுப் பொருட்கள் விலை உயர்வே இதற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் சில்லறை பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.இப்படி பணவீக்கம் தொடர்ந்து தேவைப்பட்டே வருவதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் அதிகரித்து 38 சதவீதமாக அறிவிக்க வாய்ப்புள்ளது.

மார்ச் மாதம் 7வது சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 லட்சத்துக்கும் அதிகமாக அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைந்தார்கள்.2022, ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சகம் அகவிலைப்படி மற்றும் நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்தி 31 சதவீதமாக அறிவித்தது.

கொரோனா தொற்று பரவிய போது அதை சமாளிக்க2020, ஜனவரி மாதம், 2020, ஜூலை மாதம் மற்றும் 2021, ஜனவரி மாதம் வழங்க வேண்டிய அகவிலைப்படியை நிறுத்தியது. அதனால் மத்திய அரசுக்கு 34,402 கோடி ரூபாய் சேமிப்பு இருந்ததாகவும் சென்ற மாதம் மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.

அதன் பிறகு 2021, ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் வழங்கப்படுகிறது. இப்போது அது 34 சதவீதமாக உள்ள நிலையில் ஜூலை மாதம் 38 சதவீதமாக அதிகரிக்கலாம என எதிர்பார்க்கப்படுகிது.தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் 34 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இத்தகைய நிலையில் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

author avatar
Parthipan K