தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை! தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது தான் சரியான தருணம்!

0
79

இந்திய ரிசர்வ் வங்கியின் இறையாண்மை தங்க பத்திர திட்டம் வருகின்ற 20 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு விற்பனையாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது தவணை ஆகஸ்ட் மாதம் 22 மற்றும் 26ம் தேதிக்குள் திறக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2021 22 ஆம் வருடத்தில் இறையாண்மை தங்க பத்திரம் திட்டத்தின் கீழ் 10 தவணைகளில் மொத்தம் 12,991 கோடி மதிப்பிலான 27 டன் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டம் தங்கத்திற்கான தேவை யை குறைப்பதற்கும் தங்கம் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் உள்நாட்டு சேமிப்பில் ஒரு பகுதியை நிதி சேமிப்பாக மாற்றும் நோக்கத்துடன் சென்ற 2015ம் வருடம் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

1 கிராம் யூனிட் கொண்ட தங்கத்தின் கிராம் மதிப்பிற்கு ஏற்றவாறு பத்திரங்கள் கிடைக்கும். எஸ் ஜி பி திட்டத்தின் கீழ் காலம் 8 வருடமாகும் 5-வது வருடத்திற்கு பிறகு திட்டத்திலிருந்து வெளியேறும் விருப்பத்துடன் அடுத்த வட்டி செலுத்தும் தேதிகளில் செயல்படுத்தப்படும்.

அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச முதலீடு 1 கிராம் ஒரு நபருக்கு அதிகபட்ச முதலீடு 500 கிராம் என்று சொல்லப்படுகிறது.

இறையாண்மை தங்க பத்திரம் திட்டம் தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

மத்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கி பத்திரங்களை வெளியிடுகிறது, அதோடு இந்த பத்திரங்கள் தனிநபர்கள் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

SGB குறைந்தபட்ச வரம்பு முதலீட்டிற்கான குறைந்தபட்ச லிமிட் 1 கிராம்

எஸ் ஜி பி அதிகபட்ச வரம்பு தான் அவர்களுக்கான அதிகபட்ச வரம்பு 4 கிலோ மற்றும் அறக்கட்டளைகள் மற்றுமொரு நிதி வருடத்திற்கு ஒத்த நிறுவனங்களுக்கு 20 கிலோ 999 தூய்மையான தங்கத்தின் இறுதி விலையின் எளிய சராசரியின் அடிப்படையில் எஸ்ஜிபி ரூபாய்களில் நிர்ணயிக்கப்படும்.

இணையதளத்தில் சந்தா செலுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு எஸ்ஜிப்பிக்களின் வெளியீட்டு விலை ஒரு கிராம் 50 ரூபாய்க்கும் குறைவாக வழங்கப்படுகிறது.

முதலீட்டாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு 2.5 சதவீதம் வட்டி விகிதம் அரை ஆண்டுக்கு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.

எஸ்.ஜி.பிக்கள், வங்கிகள், ஸ்டாக் ஹொல்டிங் கார்பொரேஷன் ஆப் இந்தியா கிளியரிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், தபால் அலுவலகங்கள் மற்றும் இந்தியாவின் 2 பங்குச் சந்தைகள் உள்ளிட்டவை மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

ஆவணங்கள்

அடையாளச்சான்று, ஆதார், அட்டை, பான் அட்டை அல்லது பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பத்திரங்களை வழங்கும் வங்கிகள், முகவர்கள் அல்லது தபால் நிலையங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்படுகிறது.