ஒரே நாளில் ரூ.36,000 தாண்டிய தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

0
135

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.36,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.51 உயர்ந்து ரூ.4505க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.36,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அன்றாடம் தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.