Gobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் மோடி! கலக்கத்தில் திராவிட கூடாரங்கள்

0
80

#Gobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் பிரதமர மோடி கலக்கத்தில் திராவிட கூடாரங்கள்

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களின் சந்திப்பு பல்லவர் தேசமான மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. உலக தலைவர்கள் அனைவரும் உற்று நோக்கிய இந்த சந்திப்பு நிகழ்வை தமிழகத்தில் அதுவும் மாமல்லபுரத்தில் நடத்தி உலகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரியம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பரப்பினார் பிரதமர் மோடி, மேலும் ஐநா சபையிலும், நாடாளுமன்றத்திலும் தமிழில் பேசி அனைவரின் பார்வையையும் தமிழகத்தின் பக்கம் திருப்பி தனி முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயமாகும்.

அவர் நினைத்திருந்தால் உலக அரங்கில் இந்தி மொழியை பெருமைப்படுத்திப் பேசி இருப்பார், ஆனால் அவர் தமிழ்தான் சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி என்று அங்காங்கே குறிப்பிட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்,.

இத்தகைய சூழ்நிலையில் #GoBackModi என்று டிவிட்டரில் ட்ரெண்ட் செய்பவர்களையும், பலூன் விடும் தமிழக எதிர்க்கட்சிகளின் கூடாரத்தை கதறவிடும் அளவுக்கு இன்னொரு நிகழ்வு நடைபெற உள்ளது,.

பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் அவர்களின் சந்திப்பு மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரடியாக பார்த்துக்கொண்டே சந்திப்பு நிகழ்வு நிகழ்வு நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.,

இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பிரதமர் மோடி நடத்திக் காட்டினால் ஜல்லிக்கட்டை உலகமே அன்றைய தினம் உற்றுநோக்கும் அளவில் திருப்பிவிட்டு தமிழர்களின் வீரத்தையும் உலக அரங்கில் தலை நிமிரச் செய்து தமிழ் சமுதாயத்திற்கு மிகப்பெரிய தொண்டு ஆற்றுகிறார் என்பதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்க முடியாது.

இப்படி ஒரு நிகழ்வு நடைப்பெற்றால் தமிழக எதிர்க்கட்சிகள் அதுவும் திராவிட கும்பல் என்று சொல்லிக்கொள்ளும் கூடாரங்கள் தமிழகத்தில் பாஜக எக்காலத்திலும் காலூன்ற முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் திராவிட கூடாரங்கள் தமிழுக்கு மொழிக்கு என்றும் எதிர்ப்பாக செயல்படுகிறார் என்று ஆங்காங்கே கூட்டம் போட்டு கூவிக்கொண்டிருக்கும் கும்பலுக்கும் பிரதமர் மரணஅடி கொடுப்பார் என்பது தெளிவாக தெரிகிறது.

author avatar
Parthipan K