முகநூல் காதலனை நம்பி சென்ற சிறுமி.. சிவப்பு விளக்கு பகுதியில் மீட்கப்பட்ட அவலம்..!

0
209

பேஸ்புக் காதலனை நம்பி சென்ற சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தில் சுந்தர்பன் பகுதியை சேர்ந்த சிறுமி அதே மாநிலத்தை சேர்ந்த தோலாஹாட் பகுதியை சேர்ந்த சிறுவனுடன் முகநூல் மூலம் நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்நிலையில், சிறுமியை சந்திக்க வர கூறிய சிறுவன் கொல்கத்தாவிற்கு அழைத்து சென்றுள்ளான். அதன்பின்னர், சிறுமி மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமியை கொல்கத்தாவின் தர்மதல்லா
பகுதியில் இருந்து மீட்டனர்.

இதனை அடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. சிறுமியின் காதலனான அந்த சிறுவன் மெஹ்ரானா கட்டூன் என்ற பாலியல் தொழிலாளியுடன் சேர்ந்து ஜைதுல் ஷேக் என்பவருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு அந்த சிறுமியை விற்பனை செய்துள்ளார். மேலும், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதன்பின், அவரை ஜைதுல் ஷேக் சிவப்பு விளக்கு பகுதியில் விற்பனை செய்ய முயற்சித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்து, மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தங்களது மகளுக்கு சமூகவலைதளங்கள் குறித்து சரியான புரிதலை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமையாகும்.