மூட்டு வலி முதுகு வலி முழங்கால் வலி இடுப்பு வலி நீங்க! சிறுநீரக கல் கரைய ஒரு வாரம் இதை தொடர்ந்து குடிங்க! 

0
204
#image_title

மூட்டு வலி முதுகு வலி முழங்கால் வலி இடுப்பு வலி நீங்க! சிறுநீரக கல் கரைய ஒரு வாரம் இதை தொடர்ந்து குடிங்க! 

நாம் தற்போது தயார் செய்ய போகும் இந்த டீயானது முதுகு வலி, மூட்டு வலி, மற்றும் முழங்கால்களில் இருக்கும் வீக்கம் ஆகியவற்றை நீக்கக்கூடியது. அதுமட்டுமில்லாமல் சிறுநீரகம் சம்பந்தமான நோய் மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுதல் ஆகியவற்றையும் குணமாக்க கூடியது.

உடல் எடையையும் கணிசமான அளவில் குறைக்கக்கூடிய இந்த அற்புத பானத்தை எவ்வாறு தயார் செய்வது எனப் பார்ப்போம்.

* *இதற்கு நாம் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் பிரியாணி இலைகள். இவை செரிமானத்தை சீராக்கி செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும். இதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தாலே குடல் இயக்க பிரச்சனைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

** அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பின்னர் அதில் இரண்டு பிரியாணி இலைகளை துண்டுகளாக்கி போடவும். இது இதயத்தில் உள்ள அடைப்புகளை நீக்கி இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

* *அடுத்து இதில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்க்கவும். சோம்பு தொப்பையை குறைக்க கூடிய ஆற்றல் வாய்ந்தது. ரத்தத்தை சுத்திகரிக்கும். எடுத்துக் கொண்டாலே நமது மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

** அடுத்து இதில் அரை ஸ்பூன் வெந்தயத்தை பொடியாக்கி சேர்க்கவும். வெந்தயம் இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கும். மலச்சிக்கலை போக்கும்.

** இது மூன்று முதல் நான்கு நிமிடங்கள் கொதித்ததும் இறக்கும் பொழுது ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் வெள்ளம் சேர்க்க வேண்டாம்.

** இதை காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்போ அல்லது உணவு உண்டபின் ஒரு மணி நேரம் கழித்தோ பருகலாம். காலையில் நேரமில்லை எனில் மாலையில் டீ குடிப்பதற்கு பதில் இதனை பருகலாம். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் பருகிவர உங்களது மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி என அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.