ஆறு மாதத்திற்கு பிறகு துபாய்க்கு சென்ற கங்குலி

0
78
ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீகரத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடைபெற இருக்கிறது. இதனால் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு விட்டது. இனிமேல்தான் வீரர்கள் பயோ-செக்யூர் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் செல்ல வேண்டும். அதன்பின் வீரர்கள் வெளியே வர முடியாது. இந்த பணி முக்கியமானது. ஒருங்கிணைப்பு வேலை மிக மிக முக்கியமானது. இதனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதற்கான பணியை மேற்பார்வையிட துபாய் சென்றுள்ளனார். இன்று துபாய் புறப்பட்ட கங்குலி தனது இன்ஸ்டாகிராமில் ‘‘ஐபிஎல் போட்டிக்காக சுமார் ஆறு மாதம் கழித்து துபாய்க்கு என்னுடைய முதல் விமானம். மூர்க்கத்தனமாக வாழ்க்கை மாற்றம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
author avatar
Parthipan K