அரசு பேருந்துகளில் இனி இவர்களும் இலவசமாக பயணம் செய்யலாம்! போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
96

தமிழகத்தில் இதுவரையில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பயணம் செய்யும் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு கிடையாது. 3 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இனி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை சட்டசபையில் நேற்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை பணப்பரிவர்த்தனையற்ற பயணச் சீட்டு முறை 70 கோடி ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.

பயண கட்டண சலுகை அனுமதி சீட்டுக்களை பெறுவதற்காக பயணம் மேற்கொள்வதை குறைக்கவும், எளிதாகவும் வசதியாகவும், பயணச் சீட்டுகள் பெறுவதற்கு எல்லா அரசு போக்குவரத்து கழகங்களின் வலைத்தளம் அல்லது இ சேவை மையம் மூலமாக இணைய தள பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

சென்னை திருச்சி மற்றும் விழுப்புரத்திலுள்ள அரசு தானியங்கி பணிகளை நவீனமயமாக்கல் மற்றும் தரம் உயர்த்துதல், உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படும் இதற்காக 70.73 லட்சம் செலவிடப்படும் என தெரிவித்திருக்கிறார்.

அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத பகுதிகளில் அரசுத்துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காக அரசு நடமாடும் மனைகளை 1.36 கோடி ரூபாய் செலவில் மதுரை, தர்மபுரி, திண்டுக்கல், வேலூர், சேலம், காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 7 பகுதிகளில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் ஏற்படுத்தப்படும். இதன் மூலமாக உரிய போக்குவரத்து கழகங்கள் பயணிகள் மற்றும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என கூறியுள்ளார் அமைச்சர் சிவசங்கர்.

பேருந்துகளின் வருகை புறப்பாடு தொடர்பான நிகழ்நேர தகவல்கள் மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் மொத்தம் 16 பயணயங்களில் இணைய வழித் தகவல் அமைப்பு மூலமாக காட்சிப்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை அதிகரிக்கவும், பணிச்சுமை வீட்டில் மீதமுள்ள இடத்தை சோதனை அடிப்படையில் சென்னை திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு மாதாந்திர அல்லது தினசரி வருகையின் அடிப்படையில் பயணம் செய்யாத நபர்களின் பார்சல் மற்றும் தூதஞ்சல் மூலமாக அனுப்ப பயன்படுத்தப்படும் என கூறியிருக்கிறார்.

விழா நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் இணையவெளி பயணச்சீட்டு முன்பதிவு மூலமாக இருவழி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும் எனவும், கூறியிருக்கிறார். தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களால் இயக்கப்பட்டு வரும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்ய இனி அனுமதிக்கப்படுவார்கள் என கூறியிருக்கிறார் அமைச்சர் சிவசங்கர்.

விருதுநகர், திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

திருச்சியில் அமைக்கப்படும் ஓட்டுனர் பயிற்சி மையத்தில் பொதுமக்களுக்கு ஓட்டுனர் பயிற்சியும், அரசுத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை கழக ஓட்டுநர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாக வராமலேயே ஓட்டுநர் உரிமத்தில் வாகன வகையினை ஒப்புவிப்பு செய்தல், போக்குவரத்து அல்லாத வாகன உரிமை மாற்றத்தை தெரிவித்தல் மற்றும் பதிவு சான்றிதழில் கொள்முதல் விவரத்தை மேற்குறிப்பு செய்தல், உள்ளிட்ட சேவைகளை கணினி மூலமாக பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார்.