சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்களின் கவனத்திற்கு! பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும்? 

0
138
For the attention of people who want to go to their hometowns! Additional holiday for Pongal?
For the attention of people who want to go to their hometowns! Additional holiday for Pongal?

சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்களின் கவனத்திற்கு! பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும்?

கொரோனா காலகட்டத்தில் மக்கள் எந்த ஒரு பண்டிகையும் சிறப்பாக கொண்டாடவில்லை.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு முதலில் கொரோனா பரவல் குறைந்தது.அதனால் மக்கள் அனைத்து இடங்களுக்கும் இயல்பாக சென்று வர தொடங்கினார்கள்.மேலும் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு அக்டோபர்  மாதம் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அதற்கு அடுத்த நாளும் விடுமுறை விடப்பட்டது. அதனையடுத்து தீபத்திருநாளிற்கு விடுமுறை மேலும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு புத்தாண்டிற்கு அடுத்த நாளான ஜனவரி 2 ஆம் தேதி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வரவுள்ளது.அதனால் பொது மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல எதுவாக இருக்கும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது,அதற்கான முன்பதிவு தொடங்கி முன்பதிவு தொடங்கியது.மேலும் அரசு பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பி வருகின்றது.

போகி பண்டிகை,மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை  வரவுள்ளது.ஜனவரி 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் அரசு விடுமுறை அளித்துள்ளது.ஆனால் மக்கள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் ஜனவரி 13 ஆம் தேதியும்,அதனையடுத்து பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு ஜனவரி 18 ஆம் தேதியும் சிறப்பு கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த கோரிக்கையை அரசு ஆலோசனை நடத்தி அறிவிப்பை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K