நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்ப கட்டணம் உயர்வு தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்!

0
332
For the attention of NEET students! Information released by the National Examinations Agency on the increase in application fees!
For the attention of NEET students! Information released by the National Examinations Agency on the increase in application fees!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்ப கட்டணம் உயர்வு தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பரவல் இருந்து வந்ததன்  காரணமாக பொது தேர்வு, போட்டி தேர்வு நடத்தப்படவில்லை.

2022 ஆம் ஆண்டு மே மாதம் தான் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதனையடுத்து மருத்துவ படிப்பிற்கான  கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்கள் அகில இந்திய கலந்தாய்வு இரண்டாவது சுற்று முடிவு நிரப்பப்படவில்லை என்றால் அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிவிடும்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடை முறையானது மாற்றப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான  மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்விற்கு நேற்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. தேர்வர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை  படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் ஏழாம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது .மே மாதம் ஏழாம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான மாணவ மாணவிகள் தயாராகி வருகின்றனர். அதனையடுத்து இதற்கான ஆன்லைன் விண்ணப்ப கட்டணத்தை 100 உயர்த்தி தேசிய தேர்வு முகமை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்விற்கு கடந்த ஆண்டு பொது பிரிவினருக்கு 1600 கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

author avatar
Parthipan K