தமிழ்நாட்டில் முதல் முயற்சியிலேயே 9 வெற்றியாளர்களை உருவாக்கிய முதல் இலவச பயிற்சி மையம்

0
427

தமிழ்நாட்டில் முதல் முயற்சியிலேயே 9 வெற்றியாளர்களை உருவாக்கிய முதல் இலவச பயிற்சி மையம்

ஆரஞ்சு அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம்-பரணம்,அரியலூர் மாவட்டம்.

இந்த மையமானது அரியலூர் மாவட்டத்தில் பரணம் எனும் கிராமத்தில் திரு.பழனிசாமி அவர்களின் சீரிய முயற்சியில் கடந்த இரு வருடமாக பல்வேறு துறையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு அரசு பணியாளர் (TNPSC) தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட வந்த நிலையில் கடந்த மாதம் முதல் நீட் (NEET ) தேர்விற்கும் விடுமுறை நாட்களில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது

இந்த மையத்தில் இருந்து கடந்த வருடம் தமிழ்நாடு வன அலுவலர் (Forest officer) பணிக்கு ஒருவர் தேர்வாகியுள்ளார்.

இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வான (TNPSC) குரூப்- 4 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் இந்த பயிற்சி மையத்தில் இருந்து மட்டும் முதல் முயற்சிலேயே 9 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இந்த தேர்விற்காக மட்டும் 16 ஆசிரியர்கள் களம் இறக்கப்பட்டனர் இவர்களின் சீரிய முயற்சி மற்றும் வழிகாட்டுதலின் படி 6 மாதம் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு இத்தகைய சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளது இந்த பயிற்சி மையம்.

அதே போன்று கடந்த மாதம் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் 15 மாணவ – மாணவிகள் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றிருந்தார்கள் அவர்களுக்கு உடல் தகுதி தேர்விற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது தற்போது அவர்கள் அனைவரும் தேர்வு முடிவிற்காக காத்திருக்கிறார்கள்.

ஒரு புறம் (NEET) நீட் தேர்விற்கும் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது இத்தேர்விற்கு கணிதம் உட்பட ஒவ்வொரு பாடத்திற்கும் 2 ஆசிரியர்கள் வீதம் சிறந்த அனுபவமிக்க 10 ஆசிரியர்களை கொண்டு கடந்த மாதம் முதல் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைவருக்கும் இலவசமாக தங்கு வசதியையும் இந்த பயிற்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது இந்த பயிற்சி மையத்தில் புதிய பாடத்திட்டதின் படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாகிய குரூப் -2&2A மற்றும் நீட் தேர்விற்காக 120 க்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் படித்து வருவது கூடுதல் சிறப்பாகும்.

நகரத்தை நோக்கி செல்லும் இந்த காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் மதுரை,திருவண்ணாமலை, கடலூர் ,சிவகங்கை,நாகை,தஞ்சாவூர்,கடலூர்,விருதுநகர்,கன்னியாகுமரி,சென்னை,திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் வந்து தங்கி படிப்பது அப்பயிற்சி மைய ஆசிரியர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றியாகும்.

மேலும் இந்த பயற்சி மையத்தில் சேர்ந்து தொடர்ந்து 6 மாதம் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை எனில் ரூபாய் 10,000 அளிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் இந்த மையத்தின் நிர்வாக இயக்குனர்.

இது பற்றி நிர்வாக இயக்குனர் திரு.பழனிசாமி அவர்களிடம் கேட்ட போது படிக்க வசதி இல்லாத கிராமபுற ஏழை மாணவர்களை ஒரு அரசு அதிகாரியாக உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை அதற்காக தான் இந்த பயிற்சி மையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு (TNPSC) காவலர் தேர்வு ,RRB,TET ,TNUSRB மற்றும் நீட்(NEET) போன்ற தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்விற்கு பணம் கட்டி படிக்க வசதி இல்லாமல் தங்களுடைய மருத்துவ கனவை விட்டு விலகி செல்லும் பல மாணவர்களை பார்த்த பிறகு தான் மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதன் பின் தான் நீட் தேர்விற்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறினார்.

இங்கு மாணவ- மாணவிகள் படிப்பதற்கு தேவையான நூலக வசதியையும்,பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ( Smart class) 58″ அளவுள்ள LED டிவி மற்றும் ஜெராக்ஸ் இயந்திரம் போன்ற அனைத்து வசதிகளையும் செய்து வைத்து இருக்கிறோம் இத்தகைய வாய்ப்பினை அரசு பணி மற்றும் மருத்துவ கனவோடு இருக்கும் மாணவ – மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தமிழகத்திலேயே நீட் தேர்விற்கு இலவசமாக பயிற்சி அளிக்க கூடிய மையமாக இதுவாக தான் இருக்கும் இத்தகைய வாய்ப்பை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

வளர்க மனித நேயம்!!
வாழ்க மனித இனம் !!

தொடர்புக்கு
திரு.பழனிசாமி :7010021004

author avatar
Ammasi Manickam