இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: போட்டி தொடங்கும் முன்பே செய்த சாதனை

0
71

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: போட்டி தொடங்கும் முன்பே செய்த சாதனை

கடந்த சில ஆண்டுகளாக பகலிரவு டெஸ்ட் போட்டி உலகம் முழுவதும் புகழ் பெற்று வரும் நிலையில், இந்தியா முதல் முதலாக வரும் 22ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி ஒன்றில் வங்கதேச அணியுடன் மோத உள்ளது.
இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


பொதுவாக டெஸ்ட் போட்டி என்றாலே ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. இதனை அடுத்த டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை ஈடுபாட்டை அதிகரிக்க பகலிரவு டெஸ்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட பல நாடுகள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் முதன்முறையாக இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே பகலிரவு இறுதி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற உள்ளது

இந்தியா விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் 67 ஆயிரம் பேர் போட்டியை பார்க்கும் அளவுக்கு இடவசதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய நிலையில், டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் கொண்ட ஆர்வத்தால் முதல் நாளிலேயே நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்பனை ஆகி விட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க தான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க முதல் முதலாக கிடைத்த வாய்ப்பு என்பதால் பலர் இந்த போட்டிக்கான டிக்கெட்டை வாங்க முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk