திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் கருகிய ஆடுகள்! வலியை கொடுத்த வாயில்லா ஜீவன்களின் அலறல் சத்தம்!

0
124

ஆட்டுக் கொட்டகையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு 20 ஆடுகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கை மக்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் 4 ஆம் கட்ட ஊரடங்கு குறித்த செய்தி நாளை அல்லது நாளை மறுநாள் பிரதமர் மோடி அவர்கள் வெளியிடுவார் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு காலத்தில் அனைவரும் வீட்டில் இருக்கும் நேரத்திலும் சில விபத்துகள் அடிக்கடி நடந்துவிடுகின்றன.

தீவிபத்தில் பலியான ஆடுகள்

அந்த வகையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள பாலசமுத்திரம் என்னும் கிராமத்தில் வீரசூரன் என்பவர் 50 -க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென ஆட்டுகொட்டகையில் தீவிபத்து ஏற்பட்டு ஆடுகள் அலறத் தொடங்கின. தீவிபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீவிபத்தில் 20 ஆடுகள் உடல் கருகி பலியாகின.

இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டு கொட்டகையில் தீவிபத்து ஏற்பட்டு ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Jayachandiran