ஆத்திச்சூடியுடன் ஆரம்பித்த பட்ஜெட்: என்னென்ன சலுகைகள்?

0
73

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை தொடங்குவதற்கு முன் ஒளவையார் குறித்த முன்னுரையை குறிப்பிட்ட அவர் ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி தனது பட்ஜெட் உரையை தொடங்கினார் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்

*விவசாயிகளுக்கு “கிசான் கிரடிட் கார்டு” வழங்கப்படும்

  • 6 ஆண்டுகளில் கடன் GDP 52% இருந்து 48% குறைந்துள்ளது
  • 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்
  • சுமார் 27.1 கோடி பேர் வறுமையில் இருந்து உயர்த்த பட்டுள்ளனர்
  • பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது
  • ஜி.எஸ்.டி. வரிக்கு பின் ஒவ்வொரு குடும்பமும் தங்களது மாத செலவில் 4% மிச்சப்படுத்தி உள்ளனர்
  • தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பெண்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதே இந்த பட்ஜெட் நோக்கம்
  • 2023ஆம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்வதற்கான இலக்கு
  • சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்
  • ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்
  • 2023ஆம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்வதற்கான இலக்கு
  • சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்
  • ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்
  • 6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்
  • விவசாயிகளுக்காக கிசான் ரயில் அறிமுகம் செய்யப்படும்
  • நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்
  • கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம்
  • தேசிய தடயவியல் மற்றும் சைபர் அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
  • பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி
  • தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் நிறுவப்படும்
  • இந்தியாவில் படிப்போம் என்ற திட்டம் முன்னெடுக்கப்படும்
  • திறன்மேம்பாட்டு ரூ.3000 கோடி

author avatar
CineDesk