பழமையான மரம் வேரோடு சாய்ந்து பெண் போலீஸ் பரிதாப பலி! நிவாராணம் வழங்கிய முதல்வர்!

0
82
Female policeman killed while leaning on an old tree Chief who provided relief!
Female policeman killed while leaning on an old tree Chief who provided relief!

பழமையான மரம் வேரோடு சாய்ந்து பெண் போலீஸ் பரிதாப பலி! நிவாராணம் வழங்கிய முதல்வர்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கே திடீரென மரம் சரிந்து விழுந்து விட்டது. அந்த மரம் மிகவும் பழமை வாய்ந்தது. அதில் அந்த இடத்தில் இருந்த முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து போலீஸ் கவிதா என்பவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே மரம் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டது. அதன் காரணமாக பெண் போலீஸ் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும்  மற்றொரு போலீஸ்காரர் முருகன் என்பவர், லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரக்கோணத்தை சேர்ந்த போலீஸ் கவிதா 2005 ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். தண்டையார் பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மரம் விழுந்ததன் காரணமாக அவர் பலியாகிவிட்டார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

பெரிய மகனான அருண் சேலம் மகேந்திரா கல்லூரியில் படித்து வருகிறான் அவனது வயது 23. பதினெட்டு வயதான அவரது மகள் சினேகா பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். இளைய மகன் விஷால் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த பெண் போலீஸ் கவிதாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பணியின்போது உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.