மகளின் தோழி என்றும் பார்க்காமல் ஆசைப்பட்ட தந்தை! இளம்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த கொடூரம்
சென்னை: திருவொற்றியூர் அருகிலுள்ள சாத்துமாநகர் மேட்டுதெருவை சேர்ந்தவர் தான் அம்மன் சேகர். 47 வயதாகும் கற்பூர வியாபாரியான இவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இவரது மகளுடன் படித்த பள்ளி தோழியான பவித்ரா என்ற பெண் அடிக்கடி தோழியை பார்க்க அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். பி.காம் பட்டதாரியான அவர் கடந்த 5 வருடமாக தோழியின் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார். இவ்வாறு வந்து செல்லும் போது அம்மன் சேகருக்கும், அவருடைய மகளின் தோழிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் முறையற்ற உறவாக முடிந்துள்ளது.
தன்னுடைய மகளின் வயது என்றும் பார்க்காமல் ஆசைப்பட்ட தந்தை மகளின் தோழியை எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசையில், அவர் விரும்பிய பொருட்களையெல்லாம் வாங்கி கொடுத்துள்ளார். இதன் மூலமாக ஆசை வார்த்தை கூறி மயக்கி அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அம்மன் சேகரும், அவர் மகளின் தோழியும் வெளியில் பல இடங்களுக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அவர்கள் நெருக்கமாக இருந்ததை எல்லாம் அம்மன் சேகர் தனது மொபைல் போனில் புகைப்படமாக எடுத்துக் கொண்டுள்ளார்.இவர்களது இந்த முறையற்ற உறவு ஏறக்குறைய 4 ஆண்டுகள் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் தான் சமீபத்தில் இருவருக்கும் இடையேயான இந்த முறையற்ற உறவு பற்றி பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதையறிந்த அம்மன் சேகர் அவரை தவிர நீ யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்றும், அப்படி திருமணம் செய்தால் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த படங்களை எல்லாம் இணையத்தளத்தில் வெளியிடுவேன் என்றும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
செய்த தவறை மறந்து பெற்றோர் பார்க்கும் நபரை திருமணம் செய்து கொள்ள தயாரான அந்த பெண்ணுக்கு, இவரின் மிரட்டல் பெரிய தொல்லையாக அமைந்துள்ளது. இதனால் பயந்து போன அந்த பெண் இவர் உயிருடன் இருக்கும் வரை தனக்கு திருமணம் நடக்காது என்று எண்ணி அம்மன் சேகரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் திட்டமிட்டபடி சில நாட்களுக்கு முன் அம்மன் சேகருக்கு போன் செய்து, உங்களுக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க வேண்டும் நாம் வெளியில் செல்லலாம் என்று அழைத்துள்ளார். அதற்கு பிறகு இருவரும் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
இரவு நெருங்கியதையடுத்து இருவரும் பைக்கில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு திட்ட சாலை அருகே வந்து கொண்டிருந்த போது, இது தான் அம்மன் சேகரை தீர்த்து கட்ட சரியான இடம் என முடிவு செய்த அந்த பெண் அவரிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து வண்டியை நிறுத்திய அம்மன் சேகரை பிறந்த நாள் பரிசு தருவதாக கூறி பெவிக் குயிக் என்னும் ஒட்டும் பசையை கண்ணில் தடவி விட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி தான் தயாராக வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அம்மன் சேகரின் மொபைல் போனை ஆராய்ந்ததில் பவித்ராவின் எண்ணுக்கு அவர் சமீபத்தில் பேசியது மற்றும் இருவரும் தனியாக இருந்த படங்கள் என சிக்கியது. இதனையடுத்து கொலைக்கு காரணமான பவித்ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மகளின் தோழி என்றும் பார்க்காமல் ஆசை பட்ட தந்தையால் அவரின் உயிரும் போய், திருமணமாக வேண்டிய பெண்ணும் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளது இரு வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.