சொந்த மகனையே கூலிப்படை ஏவி கொலை செய்த தந்தை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

0
86

சொந்த மகனையே கூலிபடை வைத்து கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம், ஹீப்ளி பகுதியை சேர்ந்தவர் அகில் (26). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், இவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில்,அகில் ஒன்றாம் தேதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அகிலின் குடும்பத்தினரை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.அதாவது அகிலின் தந்தையே மகனை கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்தது. சொத்து பிரச்சனையில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மகன் என்றும் பாராமல் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

சம்பவதன்று, கூலிபடையினரிடம் மகனை சிக்க வைத்துள்ளார். கூலிப்படையினர் அகிலை கொலை செய்து அங்குள்ள கரும்பு தோட்டத்தில் உடலை எரித்தது தெரியவந்தது. இதனை அடுத்து, தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த கொலையில் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.