விவசாயி விஷம் குடித்து தற்கொலை! நாமக்கல் அருகே சோகம்!

0
107

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகில் உள்ள கரட்டுப்பாளையம், இச்சிக்காடு கிராமத்தை சார்ந்தவர் சுப்பிரமணி(58), இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்து கொண்டிருந்தது. ஆகவே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.

இருந்தாலும் அவருடைய உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. இதனால் மனமடைந்து காணப்பட்டு வந்த சுப்பிரமணி வாழ்க்கையில் விரக்தி அடைந்து சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம், அதிகாலையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.

இதன் காரணமாக அதிர்ச்சியில் உறைந்த அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சுப்பிரமணியை மீட்டு உடனடியாக கரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கியிருந்தனர். ஆனாலும் அந்த தீவிர சிகிச்சை பலனளிக்காமல் சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியன் உறவினர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.