திருமண நாளில் மகனை கொன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம்! இதற்காகவா தற்கொலை..?

0
94

திருமண நாளில் மகனை கொன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம்! இதற்காகவா தற்கொலை..?

நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை கொண்டாடிய வேளையில், தொழிலில் ஏற்பட்ட கடனால் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட கோர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஷால் அவரது மனைவி ஹிமானி. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. வட மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் ஹோலிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடியபோது ஓட்டல் கடை நடத்தி வந்த விஷாலின் வீட்டு கதவு மட்டும் நீண்டநேரமாக பூட்டியே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார்கள் உடனடியாக கதவைத் திறந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

விஷால் அவரது மனைவி மற்றும் 3 வயது மகன் ஆகிய மூவரும் இறந்து கிடந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார்கள் உடனடியாக காவல்துறைக்கு புகாரளித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தபோது; விஷால் தனது தொழிலுக்காக கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் மகனை கொன்று பின்னர் மனைவியுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்த அன்று விஷால் மற்றும் ஹிமானியின் திருமண நாள் என்று கூறப்படுகிறது. திடீரென நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Jayachandiran