பொதுத்தேர்வில் தோல்வி!! 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!!

0
138
Failed in public exam!! Plus-1 students commit suicide in frustration!! Screaming family!!
Failed in public exam!! Plus-1 students commit suicide in frustration!! Screaming family!!

பொதுத் தேர்வில் தோல்வி!! 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!!

கடலூர் மாவட்டம்  உள்ள பஞ்சங்குப்பம் கன்னி கோவில் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சித்தார்த்தன் வயது (17) 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பொது தேர்வு முடிவு வெளியானதில் சித்தார்த்தன் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த சித்தார்த்தன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விரைந்து வந்து சித்தார்த்தனை மீட்டு வந்து முதலுதவி கொடுக்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர் சித்தார்த்தன் முன்னதாகவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K