ஆரஞ்சு பழத்தோல் மட்டும் போதும்! அப்புறம் உங்க முகம் பளிச்சென்று ஆகிவிடும்!

0
98

முகத்தை அழகாக பொலிவாக கரும்புள்ளிகள், முகப்பருக்கள் எதுவுமின்றி வைத்திருக்க வேண்டும் என்பது பெண்களின் மிகப் பெரிய ஆசையாக இருக்கும். அதற்கு நாம் இரவில் இரண்டு சொட்டு தினமும் இதைச் செய்தால் மட்டும் போதும். உங்கள் முகம் சுருக்கமின்றி மிகவும் பளபளப்புடன் காணப்படும்.

தேவையான பொருட்கள்:

1. ஆரஞ்சு பழத்தோல்

2. தேங்காய் எண்ணெய்

செய்முறை:

1. முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

2. அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

3. இப்பொழுது ஒரு வானொலி சட்டியை அடுப்பில் வைத்துக் கொள்ளவும்.

4. இது ஆரஞ்சு தோல்களை போட்டு 100 மில்லி அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

5. நன்கு ஐந்து நிமிடம் கொதித்து வரவேண்டும்.

6. 5 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

7. இப்பொழுது இதை தனியாக வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இதை நீங்கள் தினமும் இரவில் படுக்க செல்லும் முன் இரண்டு சொட்டு அளவிற்கு எடுத்து நன்றாக மசாஜ் செய்துவிட்டு காலையில் எழுந்து கழுவி கொள்ளலாம்.

author avatar
Kowsalya