பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:!

0
91

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:!

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில்,காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை,விஜயதசமி, பண்டிகைகள் உள்ளிட்டு காலாண்டு விடுமுறை 6-12வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலும் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரையும் விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு மேலும் நான்கு நாள் விடுமுறை நீடித்து அதாவது அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிவிப்பு சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் இன்று முதல் சிபிஎஸ்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Pavithra