சிவகாசி வெடி பொருள் தயாரிக்கும் ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை சாலையில் கோடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான வெடிபொருள் தயாரிக்கும் ஆலை உள்ளது.இந்த ஆலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அந்த ஆலையின் ஒரு அறையில் எதிர்பாராதவிதமாக,உராய்வின் காரணமாக,தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் அந்த அறையில் வேலை செய்து கொண்டிருந்த பாண்டியராஜன் என்பவரும்,ஜெய முத்து என்பவரும், படுகாயமடைந்தனர்.மேலும் அந்த ஆலையின் அறை முற்றிலும் தரைமட்டமானது.தகவலின் பெயரில் அவ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு அந்த இரண்டு நபர்களையும் மீட்டு சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.இந்த விபத்து குறித்து சிவகாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.